New Updates! Fresh news just arrived.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை சூடு பிடிக்கிறது; கைது ...

News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை சூடு பிடிக்கிறது; கைது தடையுத்தரவு கோரி கோட்டாபய மனு!

June 16, 2026 2:11 pm
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை சூடு பிடிக்கிறது; கைது தடையுத்தரவு கோரி கோட்டாபய மனு!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் பின்னணியில், முன்னாள் ஜனாதிபதி Gotabaya Rajapaksa தம்மை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மனுவில் பிரதிவாதிகளாக காவல்துறை மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் Shani Abeysekara மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிலையப் பொறுப்பதிகாரி மேத்யூ குணவர்தன ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த மனு தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் மீது அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now